வாணியம்பாடியில் காரில் 30 கிலோ கஞ்சா


SUBMITTED BY: vinothushaptc

DATE: June 28, 2017, 7:50 a.m.

FORMAT: Text only

SIZE: 1.0 kB

HITS: 682

  1. வாணியம்பாடியில், காரில் கடத்திவரப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தந்தை - மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  2. வாணியம்பாடி,
  3. ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து வேலூர் மாவட்டம் முழுவதும் சப்ளை செய்ய கார் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாணியம்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரம் உத்தரவின்பேரில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்ரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், சுரேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  4. அந்த சமயத்தில் வேலூரில் இருந்து வேகமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது சீட்டுக்கு அடியில் தனித்தனி பாக்கெட்டுகளாக 30 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
  5. தந்தை - மகன் கைது
  6. இதனையடுத்து போலீசார் காரில் கஞ்சா கடத்தி வந்த திருப்பத்தூரை அடுத்த பொம்மிகுப்பத்தை சேர்ந்த மாது (வயது 60), அவரது மகன் ராஜவேல் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் காரின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

comments powered by Disqus